பிரிவு
நீ உதறிச்சென்றது என் கைகளை மட்டும் அல்ல நான் உன் மீது கொண்டிருந்த தீரா காதலையும்
நீ உருவிச்சென்றது என் காதலை மட்டும் அல்லநெஞ்சாங்கூட்டில் நட்டு வைத்திருந்த நேசத்தையும்
மாற்றத்தை எதிர்கொள்வேன் என்று மார்தட்டியவன் இன்று மாற்றத்தை மாற்றத் துடிக்கிறேன்
தெய்வங்கள் கொல்லும் என்று தெரிந்தவன் தேவதையும் கொல்லும் என்பதை அறிந்தேன்
உடலை விட்டு உயிர் பிரிந்தால் பிணமாம்!!!உன்னை பிரிந்து உயிர் வாழும் நான்??

