Sunday, September 28, 2008

கனவு

"திருடண்டா நீ"
"யாரு நானா? நான் என்னடி பண்ணினேன்"
"தெரியாத மாதிரி கேக்காத. நீ திருடினது என்னனு உனக்கு தெரியாதா?"
"சத்தியமா இந்த chocolatea நான் காசு கொடுத்துதான் வாங்கினேன்.
என்ன நம்பு"
"ரொம்ப சாமர்த்தியமா பேசறதா நினைப்பா உனக்கு? இந்த பேச்சுக்கெல்லாம் யாரும் மயங்க மாட்டங்க தெரியும்ல"
"அப்படியா, அப்ப நீ மட்டும் எப்படி மயங்கின?"
"என்ன பண்றது. காதலுக்கு கண் இல்லையே"
"கரெக்ட். எனக்கும் கண் இல்லாம போய்டுச்சே"
"போடா. வேணும்னா அந்த குதிரை வால் ரேகா கிட்டயே போ"
"நான் என்ன மாட்டேனா சொல்றேன். ஊருக்குள்ள எல்லாருக்கும் நம்மள பத்தி தெரிஞ்சி போச்சே. நான் என்ன பண்றது?"
"அட பாவி, இப்பவே இப்படி பேசறியே. கல்யாணத்துக்கு அப்புறம் என்ன சொல்லுவியோ நீ. உன்ன நம்பினது என்னோட தப்பு"
"ச்சே ச்சே அப்டில்லாம் இல்லடா செல்லம். சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். கல்யாணத்துக்கு அப்புறம் உனக்கு சாக்லேட் கிடையாது. ஏன்னு தெரியுமா?"
"ஏன்டா??"
"ஏனா ஸ்வீட் இருக்குனு எறும்பு கடிச்சா என்ன பண்றது. இப்பவும் பாரு ஒட்டிகிட்டு இருக்கு."
"எங்கடா?? "
"இரு அத கையால எடுக்க முடியாது. அதனால…."
"டேய் பொறுக்கி. சீ போடா……."
அவன் அவள் அருகில் நெருங்குகையில்
"Major, its time to move sir"
மூன்று வருட காதலுக்கு பிறகு, திருமணத்திற்கு நான்கு நாட்கள் மட்டும் இருந்த சமயம் திவிரவாத தாக்குதலில் அவள் பலியான பிறகு, தன் வேலையை விட்டு விட்டு, தன் கனவு கருகியதை போல் வேறு யார் கனவும் கலையக்கூடாது என்பதற்காக ராணுவத்தில் சேர்ந்து திவிரவாதிகளை வேட்டையாடும் சிறப்பு படையின் தலைவன் மேஜர் சரவணன், தனது அடுத்த வேட்டைக்கு புறப்பட்டான். கண்கள் நிறைய கனவோடு காத்திருக்கும் பலரின் கனவை காக்கும் கனவோடு.

Labels: ,

அத்த மக

ஆத்தோரம் அலையடிக்க அரசமர காத்தடிக்க
ஊர் குருவி பாட்டு
படிக்குதுநெஞ்செல்லாம் உன்
நெனவாநெனப்பெல்லாம் உன் முகமா
நானும் தவம்
கெடக்கஅண்ணாந்து பாக்காம அடி அடியா போறவளே
அத்த மக ரத்தினமே
ஆத்தோரம் வளந்திருக்கும் அரளிச்செடிய கொளுத்தினது போல
நெஞ்சோரம் பொதச்சிருந்த கனவையெல்லாம் கொளுத்திவிட்டு
புருசனோட போறவளே
விடியலுக்குள்ள சேதி வரும்
உயிரே, உன்ன பிரிஞ்சு வாழும் உடம்ப வந்து பாரு

Labels: , ,

Saturday, September 27, 2008

கனவு

"திருடண்டா நீ"
"யாரு நானா? நான் என்னடி பண்ணினேன்"
"தெரியாத மாதிரி கேக்காத. நீ திருடினது என்னனு உனக்கு தெரியாதா?"
"சத்தியமா இந்த chocolatea நான் காசு கொடுத்துதான் வாங்கினேன்.
என்ன நம்பு"
"ரொம்ப சாமர்த்தியமா பேசறதா நினைப்பா உனக்கு? இந்த பேச்சுக்கெல்லாம் யாரும் மயங்க மாட்டங்க தெரியும்ல"
"அப்படியா, அப்ப நீ மட்டும் எப்படி மயங்கின?"
"என்ன பண்றது. காதலுக்கு கண் இல்லையே"
"கரெக்ட். எனக்கும் கண் இல்லாம போய்டுச்சே"
"போடா. வேணும்னா அந்த குதிரை வால் ரேகா கிட்டயே போ"
"நான் என்ன மாட்டேனா சொல்றேன். ஊருக்குள்ள எல்லாருக்கும் நம்மள பத்தி தெரிஞ்சி போச்சே. நான் என்ன பண்றது?"
"அட பாவி, இப்பவே இப்படி பேசறியே. கல்யாணத்துக்கு அப்புறம் என்ன சொல்லுவியோ நீ. உன்ன நம்பினது என்னோட தப்பு"
"ச்சே ச்சே அப்டில்லாம் இல்லடா செல்லம். சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். கல்யாணத்துக்கு அப்புறம் உனக்கு சாக்லேட் கிடையாது. ஏன்னு தெரியுமா?"
"ஏன்டா??"
"ஏனா ஸ்வீட் இருக்குனு எறும்பு கடிச்சா என்ன பண்றது. இப்பவும் பாரு ஒட்டிகிட்டு இருக்கு."
"எங்கடா?? "
"இரு அத கையால எடுக்க முடியாது. அதனால…."
"டேய் பொறுக்கி. சீ போடா……."
அவன் அவள் அருகில் நெருங்குகையில்
"Major, its time to move sir"
மூன்று வருட காதலுக்கு பிறகு, திருமணத்திற்கு நான்கு நாட்கள் மட்டும் இருந்த சமயம் திவிரவாத தாக்குதலில் அவள் பலியான பிறகு, தன் வேலையை விட்டு விட்டு, தன் கனவு கருகியதை போல் வேறு யார் கனவும் கலையக்கூடாது என்பதற்காக ராணுவத்தில் சேர்ந்து திவிரவாதிகளை வேட்டையாடும் சிறப்பு படையின் தலைவன் மேஜர் சரவணன், தனது அடுத்த வேட்டைக்கு புறப்பட்டான். கண்கள் நிறைய கனவோடு காத்திருக்கும் பலரின் கனவை காக்கும் கனவோடு.

Labels: ,

Thursday, September 11, 2008

பிரிவு

நீ உதறிச்சென்றது என் கைகளை மட்டும் அல்ல நான் உன் மீது கொண்டிருந்த தீரா காதலையும்
நீ உருவிச்சென்றது என் காதலை மட்டும் அல்லநெஞ்சாங்கூட்டில் நட்டு வைத்திருந்த நேசத்தையும்
மாற்றத்தை எதிர்கொள்வேன் என்று மார்தட்டியவன் இன்று மாற்றத்தை மாற்றத் துடிக்கிறேன்
தெய்வங்கள் கொல்லும் என்று தெரிந்தவன் தேவதையும் கொல்லும் என்பதை அறிந்தேன்
உடலை விட்டு உயிர் பிரிந்தால் பிணமாம்!!!உன்னை பிரிந்து உயிர் வாழும் நான்??

Labels: , , ,

Monday, September 08, 2008

காதலி

கடவுளை பார்த்ததுண்டா என்று கேட்டனர்
தேவதையை பார்த்ததுண்டு என்று கூறினேன், உன் நினைவால்

எங்கு தொலைபேசி ஒலி கேட்டாலும் உன் நினைவு கொள்கிறேன்!!

கோவிலில் கடவுளும் உன்னை பார்த்த பின்புதான்
எங்களுக்கு தரிசனம் தருகிறார்

என்றும் முறைக்கும் பூக்காரி இன்று சிரிக்கிறாள்
நான் ரோஜா ஒன்று வாங்கியதும்

Labels: , ,

Saturday, September 06, 2008

சுதந்திரம்

கூண்டினில் தலைவர் சிலைக்கு மாலை
சுதந்திர தின விழாவினில்

Labels: ,